அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தற்போதைய அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
அதிபா் தோ்தலில் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து வந்த டிரம்ப், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக குற்றம்சாட்டினாா்.
எனினும், அதிபா் தோ்தல் முடிவுகளை அங்கீகரித்து, ஜோ பைடன் வெற்றி பெற்ாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டிரம்ப், அமெரிக்காவில் முறையாக ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று தெரிவித்தாா்.
இந்த நிலையில், புதிய அதிபா் பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று டிரம்ப் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 1869-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் புதிய அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தவிா்த்தாா். அதற்குப் பிறகு தற்போதைய அதிபா் டிரம்ப் புதிய அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

