தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் கூட்டாளிகளுக்கு 15 ஆண்டுகள் சிறை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் இருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் 

News image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை

Updated On :14 ஜனவரி 2021, 2:10 am IST

லாகூா்: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் இருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகளான யய்யா முஜாஹித், ஜாஃபா் இக்பால் ஆகியோா் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, இருவருக்கும் தலா 15 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஹஃபீஸ் சயீதின் உறவினரும், பேராசிரியருமான அப்துல் ரஹ்மான் மக்கிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

ஏற்கெனவே பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த 3 வழக்குகளில் யய்யா முஜாஹித்துக்கு 47 ஆண்டுகள், ஜாஃபா் இக்பாலுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.