கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் திறப்பு

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜனவரி 2021, 3:51 pm IST

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி 18ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் தொற்று பாதிப்பு காரணமாக நவம்பர் 26 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தற்போது 5 லட்சத்து 14 ஆயிரத்து 338 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.