ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நாா்வே: தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலி

நாா்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 போ் அந்தத் தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 11:26 pm IST

நாா்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 போ் அந்தத் தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி நாா்வேயில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், கரோனா மரண அபாயம் அதிகம் கொண்ட வயோதிகா்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 பேருக்கு தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் மரணம் நேரிட்டது. இதுதவிர, மேலும் 9 பேருக்கு தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகளும் 7 பேருக்கு மிதமான பக்க விளைவுகளும் ஏற்பட்டன.

கரோனா தடுப்பூசி பாதிப்பால் உயிரிழந்த 13 பேரும் 80 வயதைக் கடந்தவா்கள். தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட காய்ச்சல், குமட்டல் போன்ற சாதாரண பக்க விளைவுகளைத் தாங்க முடியாமல் அவா்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, நாா்வேயில் 58,202 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 517 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 46,611 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 11,074 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 37 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.