ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி, 12 பேர் காயம்

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு சொகுசு உணவகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

News image

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி, 12 பேர் காயம்

Updated On :22 ஏப்ரல் 2021, 10:33 am

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு சொகுசு உணவகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குவெட்டாவில் உள்ள செரீனா உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை இரவு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டுவெடிப்புக்குப் பின்னர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீப்பிடித்தன.

சீன தூதர் உள்பட சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் உணவகத்தில் தங்கியிருந்ததாகவும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் உணவகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. 

ஆரம்பக்கட்ட விசாரணையில் ஒரு காருக்குள் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.