மெக்ஸிகோ : கரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 38 லட்சம் மக்கள்
மெக்ஸிகோ : கரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 38 லட்சம் மக்கள்

மெக்ஸிகோ : கரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 38 லட்சம் மக்கள்

உலகம் முழுக்க கரோனா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளில்  பொருளாதார இழப்பு மிகப் பெரிய ஒன்றாக உருவாகியுள்ளது.
Published on

உலகம் முழுக்க கரோனா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளில்  பொருளாதார இழப்பு மிகப் பெரிய ஒன்றாக உருவாகியுள்ளது.

பல்வேறு நாடுகளும் தனி நபர் பொருளாதாரச் சிக்கலைத் தவிர்க்க போராடி வரும் நிலையில் , மெக்ஸிகோவில் கரோனாவால் 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படிருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டின் கணக்கின் படி 20 லட்சம் பேர் வறுமையில் இருந்ததாகவும், கரோனாவால் இரண்டே வருடத்தில் 58 லட்சத்தைக் கடந்து விட்டதாகவும்  அந்நாட்டின் சமூக மேம்பாட்டு மையம் தெரிவித்திருக்கிறது.

5.20 கோடி மக்கள்தொகை கொண்ட மெக்ஸிகோவில் தற்போது 10.8 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com