குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீயால் ஏதென்ஸை விட்டு வெளியேறும் மக்கள்

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது தலைநகர் ஏதென்ஸை நெருங்கி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

News image
ஏதென்ஸை நெருங்கும் காட்டுத்தீ: தொடரும் காலநிலை மாற்ற சிக்கல்
Updated On :7 ஆகஸ்ட் 2021, 2:00 pm

DIN

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது தலைநகர் ஏதென்ஸை நெருங்கி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருவதால் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தலைநகர் ஏதென்ஸ்க்கு வடக்கே தீ பரவி வருவதால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.

காட்டுத்தீ பரவல் வேகமாகி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதென்ஸ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

நாட்டின் பேரிடர் மீட்புத்துறை மற்றும் ராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் வானிலிருந்து தண்ணீரை இறைஞ்சி தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

காடுகளில் உள்ள வன விலங்குகள் இரண்டாவது வாரமாக எரிந்துவரும் தீயில் சிக்கி பலியாகி வருவது அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகளின் காரணமாக  தெற்கு ஐரோப்பாவின் துருக்கி, அல்பேனியா நாடுகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக வடக்கு மாசிடோனியாவில் அடுத்த 30 நாள்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் வர்ஜினிஜஸ் சின்கெவிசியஸ், தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பானது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.