அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆஸ்திரேலியாவில் தீவிரமாகும் டெல்டா வகை: மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்

சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில், மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஆகஸ்ட் 2021, 5:47 am

DIN

சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில், மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்டியில் 344 பேர் டெல்டா வகை கரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து. பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிட்னியிலிருந்து 240 மைல் தூரத்தில் அமைந்துள்ள டப்பா நகரில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில், கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. அது தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெருந்தொற்றால் இன்று இருவர் உயிரிழந்தனர். 60 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள இரண்டாவது பெரிய நகரமான சிட்னியில் ஆறு வார காலமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.