கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அடுத்தது ஆப்கானிஸ்தான் தலைநகர்? காபூலிலிருந்து 11 கி.மீ. தொலைவில் தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கேவுள்ள மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:43 am

DIN


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கேவுள்ள மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூலுக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள லோகார் மாகாணத் தலைநகர் புல்-ஏ-ஆலம் நகரை தலிபான்கள் வெள்ளிக்கிழமை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில் லோகார் மாகாணம் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாகாண அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காபூலுக்கு 11 கி.மீ. தொலைவிலுள்ள சார் அஸ்யாப் மாவட்டத்தை தலிபான்கள் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் 4-வது பெரிய நகரமான மாஸார்-இ-ஷரிப் நகர் மீது பல்வேறு திசைகளிலிருந்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக பால்க் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.