கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:48 am

DIN

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளதாக ஏஃஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுப்பதில் இறுதி கட்டத்தை அவர்கள் அடைந்துள்ளனர்.

ஆப்கன் படைகளின் கோட்டையாக கருதப்படும் மசார்-இ-ஷெரீப்பை கைப்பற்றியதை தொடர்ந்து, கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்தனர். கடந்த 10 நாள்களில், ஆப்கன் அரசு படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 

இதுகுறித்து தலிபான்கள் ஆதரவு சமூகவலைதளங்கள், "காபூல் மாகாணத்தின் தொலைதூர பகுதிகள் நோக்கி எங்கள் படைகள் வேகமாக முன்னேறிவருகிறது. தலைநகரின் புறநகர் பகுதிகளை நெருங்கிவருகிறோம்" என பதிவிட்டிருந்தன. 

காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்தது குறித்து ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனின் தலைமை அலுவலர் மாடின் பெக் கூறுகையில், "அச்சப்பட வேண்டாம். காபூல் பாதுகாப்பாக உள்ளது" என்றார். தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்துள்ள நிலையில், ஆப்கள் படைகள் சரணடையுமா அல்லது கடும் போரை மேற்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.