இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு அரசாங்கம் கரோனாவால் பெரிதாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதை தடை செய்திருந்தனர்.
இதையும் படிக்க | நாட்டில் 50 கோடியை கடந்த கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
இந்நிலையில் அங்கு 'க்ரீன் பாஸ்' என்னும் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அட்டை இருந்தால் மட்டுமே வணிக வளாகங்கள், பூங்காக்கள் , உணவகங்கள் , நீச்சல் குளங்கள் , உடற்பயிற்சி கூடங்கள் , கலாச்சார விழாக்கள் போன்றவற்றிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட கரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கே இந்த 'க்ரீன் பாஸ்' வழங்கப்படுகிறது .
பாஸ் கிடைக்காதவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த கரோனாவால் பாதிப்படையவில்லை என்கிற சான்றிதழ்களை காண்பித்து அந்த இடங்களுக்குள் நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடனே பொது இடத்தில் கூட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.