புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அக். 15 முதல் பொதுப்போக்குவரத்தில் அனுமதியில்லை

முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகிற அக்டோபர் 15 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 11:45 am

DIN

முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகிற அக்டோபர் 15 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துள்ளன. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சில முன்னுரிமைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில். வருகிற அக்டோபர் 15 முதல் முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

மேலும், அக்டோபர் 15க்குப் பிறகு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். 

செப்டம்பர் 30க்குப் பிறகு விமானப் பயணத்திற்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 31 முதல் தடுப்பூசி போடாதவர்கள் ஷாப்பிங் மால்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் வருகிற செப்டம்பர் 29 வரை ஷாப்பிங் மால்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 

செப்டம்பர் 30 க்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திருமண விழாக்களில் அனுமதி, ஹோட்டல்களில் அனுமதி, நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.