அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி

சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு தலைவலியாக இப்பிரச்சனைகள் உருவாகியிருக்கிறது. 

News image
நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி -கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

DIN

சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு  இப்பிரச்சனைகள் தலைவலியாக உருவாகியிருக்கிறது. 

கடந்த ஆக-12 ஆம் தேதி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 22 பேர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தற்போது நேற்று (ஆக-25) அந்நாட்டின் பிளாட்டி மாகாணத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சைமன் லாலோங் ' எல்வா செங்கம் கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் 10 பேரை கைது செய்திருக்கிறோம் . மேலும் மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஒருநாள் ஊரடங்கும் அமல்படுத்த இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.