பெரு நாட்டின் ஹல்லகா ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று (ஆக-29) ஞாயிற்றுக்கிழமை சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் பகுதிக்கு செல்ல படகு மூலம் 80 பேர் பயணம் செய்தனர். அப்போது ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். மேலும் நீரில் விழுந்த பலர் மாயமாகிருக்கிறார்கள் .
படகில் பயணித்தவர்களில் 20 குழந்தைகளும் இருந்ததால் அங்கே பெரிய பதற்ற நிலை உருவானது.பின் உடனடியாக விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதும் அந்நாட்டின் மீட்புப் படையினரும் , கடலோரக் காவல்படையும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.