பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் படுகாயம்

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image

பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் மாயம்

Updated On :30 ஆகஸ்ட் 2021, 9:32 am

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (ஆக-29) ஞாயிற்றுக்கிழமை சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் பகுதிக்கு செல்ல படகு மூலம் 80 பேர்  பயணம் செய்தனர். அப்போது ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். மேலும் நீரில் விழுந்த பலர் மாயமாகிருக்கிறார்கள் .

படகில் பயணித்தவர்களில் 20 குழந்தைகளும் இருந்ததால் அங்கே பெரிய பதற்ற நிலை உருவானது.பின் உடனடியாக விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதும்  அந்நாட்டின் மீட்புப் படையினரும் , கடலோரக் காவல்படையும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.