கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆயுதம் ஏந்திய தலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில் காபூல் விமான நிலையம் முழுவதும் ஆயுதமேந்திய தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

News image

காபூல் விமான நிலையம் முன்பு தலிபான்கள்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 10:47 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில் காபூல் விமான நிலையம் முழுவதும் ஆயுதமேந்திய தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப் படைகள் இன்று முழுவதுமாக அங்கிருந்து வெளியேறியது. 

Story image

14 மாதங்களில் அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும் என கடந்த ஆண்டு அமெரிக்கா- தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதன்படி, ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில், மீட்புப் பணிக்காக காபூல் விமான நிலையத்தில் மட்டும் அமெரிக்கப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அமெரிக்கப் படைகள் முழுவதுமாக இன்று ஆப்கனிலிருந்து வெளியேறியது. 

Story image

இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. காபூல் விமான நிலையம் சுற்றிலும் தலிபான்கள், இயந்திர பீரங்கிகள், இயந்திர துப்பாக்கிகள் என பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், 'இது வெற்றியின் மகிழ்ச்சியான தருணம்' என்று கூறினார். 

திங்கள்கிழமை இரவு, கொண்டாட்த்திற்காக  தலிபான்கள் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 'இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, நாங்கள் அமெரிக்கர்களை தோற்கடித்து விட்டோம்' என்று விமான நிலைய காவலர் முகமது இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

Story image

முன்னதாக, அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகிய இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.