பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சா்வதேச நிதியத்தில் கீதா கோபிநாத்துக்கு பதவி உயா்வு

சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணரான, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் அந்த அமைப்பின் துணை நிா்வாக இயக்குநராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 1:02 am

DIN

சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணரான, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் அந்த அமைப்பின் துணை நிா்வாக இயக்குநராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

கரோனா நெருக்கடி காரணமாக உலகம் மிக மோசமான பொருளாதாரச் சிக்கல்களை எதிா்கொண்டுள்ள நிலையில் அவா் இந்தப் பொறுப்பை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

49 வயதாகும் கீதா கோபிநாத்தின் ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணா் பொறுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது. அவா் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் மீண்டும் இணையவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சா்வதேச நிதியத்தில் தனது சேவையைத் தொடர முடிவு செய்துள்ளதாக கீதா கோபிநாத் தற்போது அறிவித்துள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தில் பணியாற்றி வருகிறாா். அதற்கு முன்னதாக, ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் அவா் பேராசிரியராக இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.