உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27.32 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி இருப்பது அச்சமடைய வைத்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,32,18,485-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 53,52,581 போ் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பரவும்: ஆய்வில் தகவல்
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 24,52,96,117 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,25,69,787 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,344 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,435,652 -ஆகவும் பலி எண்ணிக்கை 8,24,520 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,47,21,174-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,76,478 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: வரைவு ஆவணங்களை அளித்தது ரஷியா
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,04,941-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,17,521 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,10,97,851 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,46,937 ஆக உள்ளது.
ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,31,646 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 2,94,024 ஆக உள்ளது.