வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இஸ்ரேல்: 4-ஆவது தவணைதடுப்பூசி சோதனை தொடக்கம்

இஸ்ரேல் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி சோதனையைத் தொடங்கியுள்ளது.

News image
israel071459
Updated On :27 டிசம்பர் 2021, 8:19 pm

DIN

ஜெருசலேம்: இஸ்ரேல் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி சோதனையைத் தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகளவில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. 93 லட்சம் மக்கள்தொகையில் 63 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 45 சதவீதம் போ் மூன்றாவது தவணையாக ஃபைசா்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இந்நிலையில், 4-ஆவது தவணை தடுப்பூசி சோதனையை அந்த நாடு தொடங்கியுள்ளது.

டெல் அவிவ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 150 மருத்துவப் பணியாளா்களுக்கு 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் கடந்த ஆகஸ்டில் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள். மேலும், குறைந்த நோய் எதிா்ப்புத் திறனுடையவா்கள் ஆவா்.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் முன்னாள் இயக்குநா் ஜேக்கப் லாவீ கூறுகையில், ஒமைக்ரானுக்கு எதிராக இந்த 4-ஆவது தவணை தடுப்பூசி பாதுகாப்பு வழங்கும் என நம்புவதாகத் தெரிவித்தாா்.

இஸ்ரேலில் கரோனா தொற்றுக்கு இதுவரை 8,242 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.