ஜப்பானில் பறவைக் காய்ச்சல்: கொல்லப்படும் 3.5 லட்சம் கோழிகள்
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3,56,000 கோழிகள் கொல்லப்படவுள்ளதாக கியூடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபா மாகாணத்தில் 10-வது முறையாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு இதுவரை பறவைக் காய்ச்சலால் 4.6 மில்லியன் பறவைகள் இறந்துள்ளன.
மேலும் ஜப்பானில், காகவா, ஃபுகுவோகா, ஹையோகோ, மியாஸாகி, ஹிரோஷிமா, நரா, வாகாயமா, டோகுஷிமா ஆகிய பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
ஜப்பானில் பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், .9.3 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜப்பான் வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...