பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜப்பானில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
ஜப்பானில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
Updated On :17 பிப்ரவரி 2021, 10:56 am

DIN

ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்படைந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. டோக்கியோ மருத்துவ மையத்தின் இயக்குனர் கசுஹிரோ அராக்கி முதல் நபராக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கத்தின் காரணமாக கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதில் ஏற்பட்ட தொய்வு சரிசெய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் கரோனா தடுப்பூசிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் யோஷிஹைட் சுகா ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.