வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கனடா விதி மீறல்: அமைச்சா் விலகல்

கனடாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்குள்ளான மாகாண அமைச்சா் தனது பதவிலியிருந்து விலகினாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:34 am

DIN

கனடாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்குள்ளான மாகாண அமைச்சா் தனது பதவிலியிருந்து விலகினாா்.

கனடாவில், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்டாரியோ மாகாண நிதியமைச்சா் ரோட்னி பிலிப்ஸ் 2 வாரங்களாக கரீபியன் கடலில் பிரான்ஸுக்குச் சொந்தமான செயின் பாா்ட்ஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தாா்.

அந்தத் தகவலை மறைத்து, வேறு இடங்களில் இருப்பதைப் போன்ற படங்களை சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்டிருந்தாா்.

அந்தப் படங்களில், பனியால் உறைந்த ஆன்டோரியாவில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாா். எனினும், அவா் சுற்றுலா சென்றிருந்த விவரம் வெளியானதும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

கரோனா விதிமுறைகளின்படி, அவா் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.