ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் பலி

ஆப்கனிஸ் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள்.
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் பலி
Updated on
1 min read

ஆப்கனிஸ் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள்.
ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணத்தில் பதுங்கியிருந்த தலிபான்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நேற்று திடீர் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் போலீஸ் கமாண்டர் தாரிக் கான் உள்பட 6 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். 
இந்த தகவலை தலிபான்களும் உறுதி செய்துள்ளனர். நங்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற மோதலில் 6 காவல்துறை அதிகாரிகள் பலியானதாகவும், 9 பேர் காயமடைந்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆப்கன் அரசு - தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com