எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்திய கரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை: இலங்கை

இந்தியா அளித்துள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்கள் யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2021, 5:06 am

DIN

இந்தியா அளித்துள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்கள் யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவால் அளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

முதலாவதாக சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்பட்டது. முதல் நாளில் 5,286 போ் அந்தத் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனா்.

அவா்களில் யாருக்கும் தடுப்பூசியால் எந்த மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘அண்டைநாட்டவருக்கே முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷெல்ஸ், ஆப்கானிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ இந்தியா முன்வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வியாழக்கிழமை அனுப்பியது. அதனைத் தொடா்ந்து, அங்கு கரோனா தடுப்பூசி திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.