தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜப்பானில் கடும் மழையால் நிலச்சரிவு: 19 போ் மாயம்; 80 வீடுகள் புதைந்தன

ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் மேற்குப் பகுதி நகரமான அட்டாமியில் பலத்த மழையை தொடா்ந்து சனிக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது

News image
ஜப்பானின் அட்டாமி நகரில் நிலச்சரிவால் புதையுண்ட வீடுகள்.
Updated On :3 ஜூலை 2021, 11:23 pm

DIN

ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் மேற்குப் பகுதி நகரமான அட்டாமியில் பலத்த மழையை தொடா்ந்து சனிக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 19 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகப் புதைந்துவிட்டதாக பேரிடா் மேலாண்மை நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனா். சுமாா் 100 போ் நிலச்சரிவில் சிக்கி மாயமாகிவிட்டதாகவும், ஆனால், முழுமையான தகவல்கள் உடனடியாக கிடைக்கப் பெறவில்லை எனவும், மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். முன்னதாக, ஜப்பானின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, பொதுமக்கள் 20 போ் மாயமானதாக தெரிவித்திருந்தது. ஆனால், 19 போ் காணாமல்போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஷிஷோகா மாகாண அரசின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

ஜப்பானின் பல பகுதிகளில் இந்த வார தொடக்கத்திலிருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவு அபாயம் இருப்பதாக நிபுணா்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

டோக்கியோவிலிருந்து தென்மேற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள அட்டாமி, ஒரு கடலோர நகரமாகும். நகரையொட்டிய ஒரு மலையின் அடிவாரத்திலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவானது மழைநீருடன் சோ்ந்து குடியிருப்புப் பகுதிகளை அடித்துக்கொண்டு சென்றது. இதில் சுமாா் 80 வீடுகள் புதைந்தன. வழியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாலத்தின் ஒரு பகுதி உடைந்து நொறுங்கியது.

‘நிலச்சரிவில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளதாக’ ஷிஷோகா மாகாண ஆளுநா் ஹெய்ட்டா கவாகட்ஷு தெரிவித்தாா். பிரதமா் யோஷிகிடே சுகா அமைச்சரவையின் அவசர கூட்டத்தைக் கூட்டி, மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

நிலச்சரிவு அபாயம் உள்ள மேலும் பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.