மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது

கனடாவில் போதைப் பொருள் கடத்திய விவகாரத்தில் பஞ்சாபை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது

Updated On :9 ஜூலை 2021, 11:56 am

PTI

கனடாவில் போதைப் பொருள் கடத்திய விவகாரத்தில் பஞ்சாபை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு வாகனம் ஓட்டி வந்த பஞ்சாபை சேர்ந்த பர்தீப் சிங்(24) என்பவரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில், 112.5 கிலோ போதைப் பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 1.4 கோடி டாலர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தொடர்ந்து பஞ்சாபை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம், டொரண்டோ பகுதியில் 6.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் கடத்தியதாக 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதில், 9 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.

மேலும், இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் 25 பஞ்சாபிகளை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.