மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

போதை பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் திணறும் அமெரிக்கா: ஒரே ஆண்டில் 93 ஆயிரம் பேர் பலி

அமெரிக்காவில் அதிகரித்துவரும் போதை பழக்கத்தால் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93,000 பேர் பலியாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :15 ஜூலை 2021, 11:09 am

DIN

அமெரிக்காவில் அதிகரித்துவரும் போதை பழக்கத்தால் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93,000 பேர் பலியாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் போதை பொருள் நுகர்வு என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு பொதுமுடக்க காலத்தில் அதிகரித்து வந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

போதை மருந்துகள், போதை ஊசிகள் போன்ற சட்டவிரோத போதைப் பொருள் பயன்பாடுகள் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93 ஆயிரத்து 331 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

இதுகடந்த 2019ஆம் ஆண்டில் 72,151ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. aதீத போதைப் பொருள் பயன்பாடு காரணமாக வெர்மோண்டில் 57 சதவிகிதமும், கென்டக்கி பகுதியில் 54 சதவிகிதமும், தெர்கு கரோலினாவில் 52 சதவிகிதமும், கலிப்போர்னியாவில் 46 சதவிகிதமும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.