கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதிய வகை கரோனாவுக்கு வாய்ப்பு: பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை

இந்தாண்டின் மழைக் காலத்தில் மற்றொரு கரோனா வகை வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளது என பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஜூலை 2021, 11:54 am

DIN

நடப்பாண்டில் மற்றுமொரு கரோனா வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளது என பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக ஆல்பா, டெல்டா வகை வைரஸ்கள் இருந்து வரும் நிலையில் மரபியல் மாற்றம் அடைந்து வரும் கரோனா வைரஸானது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவால் விடுத்துவருகிறது.  

இதனிடையே, கரோனா பரவல் தீவிரமடைய டெல்டா பிளஸ் வகை முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிலையில், இந்தாண்டின் மழைக் காலத்தில் மற்றொரு கரோனா வகை வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளது என பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "புதிய வகை கரோனா ஏற்படுத்தவுள்ள விளைவுகளை கணிக்க முடியவில்லை. ஆனால், மரபியல் மாற்றம் அடைவதற்கு அதற்கு ஒப்பீட்டளவில் குறைந்த திறனே உள்ளது. 

எனவே, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது முகக்கவசம் அணிவது போன்றவற்றை மக்கள் மீ்ண்டும் பின்பற்ற வேண்டும். மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்பட்சத்தில் 2022 அல்லது 2023க்குள் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.

தடுப்பூசி செலுத்திய நாடுகள் ஒரு புறமும் செலுத்தாத நாடுகள் மறு புறமும் உள்ள நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதில்தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது சாத்தியமாகும்." என்றார்.

கரோனா நான்காவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களுக்கு செல்ல சுகாதார நுழைவுச் சீட்டு திட்டம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் , கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே நுழைவுச் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.