இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து..பின்வாங்கிய இம்ரான் கான்

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து தெரித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது அதற்கு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜூலை 2021, 4:53 pm IST

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து தெரித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது அதற்கு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் பாகி்ஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் கூறிய கருத்துக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களே அந்த குற்றத்திற்கு முற்றிலும் பொறுப்பு ஏற்க வேண்டும். இதில், தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

எந்தளவுக்கு உணர்வுகளை தூண்டினாலும் அல்லது உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணிந்தாலும் குற்றத்தில் ஈடுபடுபவரே பொறுப்பு ஏற்க வேண்டும். பாதிக்கப்ப்படவர் பொறுப்பு அல்ல. எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. 

பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் பாகி்ஸ்தான் சமூகம் குறித்துதான் பேசப்பட்டது. நான் இதை சொல்லியே ஆக வேண்டும். நான் அளித்து நேர்காணல்கள் குறித்து எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தை சொல்லியதே இல்லை. அனைத்து பெண்களையும் இஸ்லாம் மதிக்கிறது" என்றார்.

கடந்த மாதம், உணர்வுகள் தூண்டப்படுவதை தவிர்த்தாலே பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.