பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் அதிக வீரியமிக்க கரோனா
முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று, பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


லண்டன்: முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று, பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்தில் ஒட்டுமொத்தமாக 12,431 பேருக்கு கரோனா பாதித்த நிலையில், அவர்களில் 5,472 பேருக்கு டெல்டா வகை கரோனா பரவியிருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் கென்ட் மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை கரோனாவை விடவும் தற்போது டெல்டா வகை கரோனா அதிகம் பரவி வருவது கண்டறியப்பட்டதால், அதன் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...