சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

News image
இலங்கையில் வெள்ளம், நிலச்சரவில் சிக்கி 4 பேர் பலி; 7 பேர் மாயம்
Updated On :28 ஜனவரி 2024, 3:19 am

PTI


கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் இருவரும் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.