சீனாவில் தற்காப்புக் கலை பயிற்றுப் பள்ளியில் தீ விபத்து: 18 பேர் பலி
சீனாவில் தற்காப்புக் கலை பயிற்றுவிக்கும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 18 பேர் பலியானார்கள்.


சீனாவில் தற்காப்புக் கலை பயிற்றுப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 18 பேர் பலியானார்கள்.
மத்திய சீனாவில் உள்ள தற்காப்புக் கலை பயிற்றுப் பள்ளியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 18 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலியான மாணவர்களில் பெரும்பாலனோர் 7 முதல் 16 வயதுடையவர்கள். விபத்தை தொடர்ந்து பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின்போது 34 மாணவர்கள் பள்ளியில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...