எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மீண்டும் தலைதூக்கும் கரோனா: மொரீசியஸில் பொதுமுடக்கம் அமல்

அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மொரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

News image

மீண்டும் தலைதூக்கும் கரோனா: மொரீசியஸில் பொதுமுடக்கம் அமல்

Updated On :10 மார்ச் 2021, 12:26 pm

அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மொரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் அதன் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.  மொரீசியஸ் நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கத் தொடங்கி உள்ளது. 

மார்ச் 5 முதல் தற்போதுவரை புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பிரவீந்த்குமார் ஜுக்னாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

துறைமுகம், விமான நிலையம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் புதன்கிழமை முதல் செயல்படும். மேலும்  பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் அகரவரிசை சுழற்சி அடிப்படையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.