சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா பலி: பிரேசிலில் 3 லட்சத்தை நெருங்குகிறது

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. 

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2021, 9:11 am

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. 
உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த சில நாள்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. 
அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 47,774 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,19,98,233ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு ஒரேநாளில் 1,290 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,94,115ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 12,54,185 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
அவர்களில் 8,318 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 10,449,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.