நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மே இறுதி வரை நீட்டிக்க நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.
மே மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு வரை விமானத் தடையை நீட்டிப்பதாக இமயமலை விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மே 14-ஆம் தேதி வரை சர்வதேச விமானம் இயங்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 நாள்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை புதிய முன்பதிவுகளைத் திறக்கவேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், மருத்துவ மற்றும் சரக்கு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானத் தடை நீட்டிக்கப்படுவதால், தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்புபவர்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.