பாலஸ்தீன குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் இருக்க வேண்டுமே தவிர இடிபாடுகளுக்கு நடுவே அல்ல என நோபல் பரிசு பெற்ற கல்வி செயற்பாட்டாளர் மலாலா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியா்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்கியதிலிருந்து ஜெருசலேமில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பிரச்னை தொடா்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 49-ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள நோபல் பரிசு பெற்ற பெண் கல்வி செயற்பாட்டாளர் மலாலா, “பாலஸ்தீன குழந்தைகள் பள்ளி வகுப்பறைகளுக்குள்ளே இருக்க வேண்டுமே தவிர கட்டட இடிபாடுகளுக்கு நடுவில் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த மனித உரிமைப் பிரச்னையில் உலக நாடுகள் உடனடியாகத் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக புதன்கிழமை அவசரமாக கூடி ஆலோசித்தது. இருப்பினும் அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்
ரூ.1 லட்சம் மோசடி: பள்ளி நிா்வாகிகள் மீது வழக்கு

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



