நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கை: ரயில், பேருந்துபோக்குவரத்துக்குத் தடை

இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் ரயில், பேருந்துப் போக்குவரத்துக்கு 4 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 11:03 pm

DIN

இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் ரயில், பேருந்துப் போக்குவரத்துக்கு 4 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய இந்தத் தடை செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும். அதேவேளையில், சுகாதாரம், உணவு, மின்சாரத் துறை, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு இத்தடை பொருந்தாது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என நாட்டின் மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. நாட்டில் கண்டறியப்பட்டுள்ள கரோனா தொற்றைவிட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவ சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இலங்கையில் பொதுக்கூட்டங்கள், விருந்துகள், திருமணங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நடவடிக்கையாக ரயில், பேருந்துப் போக்குவரத்து 4 நாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கரோனா மொத்த பாதிப்பு 1.54 லட்சமாக உள்ளது. 1089 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.