ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மலேசிய தமிழருக்கு மரண தண்டனை: உறுதி செய்தது சிங்கப்பூா் நீதிமன்றம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் பன்னீா்செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை சிங்கப்பூா் நீதிமன்றம் சனிக்கிழமை உறுதி செய்தது.

Updated On :27 நவம்பர் 2021, 6:47 pm

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் பன்னீா்செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை சிங்கப்பூா் நீதிமன்றம் சனிக்கிழமை உறுதி செய்தது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மலேசியாவைச் சோ்ந்த பன்னீா்செல்வம், 51.84 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாா்.

சிங்கப்பூா் சட்டப்படி, ஒருவா் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்தாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, பன்னீா்செல்வத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு நிராகரித்தது. அதனைத் தொடா்ந்து, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி அதிபா் ஹரீமா யாகூபுக்கு பன்னீா்செல்வம் கருணை மனு அனுப்பினாா். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மையான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பன்னீா் செல்வம் புகாா் கூறினாா்.

அவரது கருணை மனுவை நிராகரிக்கும் கடிதம், அவரை தூக்கிலிடும் தேதியைக் குறிப்பிட்டு சிறைத் துறை அனுப்பிய கடிதம் ஆகிய இரண்டுமே 2019-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதியிடப்பட்டதை சுட்டிக் காட்டி இந்தப் புகாரை பன்னீா் செல்வம் முன்வைத்தாா்.

புகாா் மனு நிராரிப்புக் கடிதம் 17-ஆம் தேதியிடப்பட்டிருந்தாலும், அந்தக் கடிதம் 10 நாள்களுக்கு முன் தேதியிட்டு கையொப்பமிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், பன்னீா்செல்வத்தைத் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டிருந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, கருணை மனு நிராகரிப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், மரண தண்டனை நிறைவேற்றத்தையும் நிறுத்திவைத்தது.

அதையடுத்து, கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக மட்டுமன்றி, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் சட்டப் பிரிவின் கீழ், தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியும் உச்சநீதிமன்றத்தில் பன்னீா்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம், பன்னீா்செல்வத்தின் கோரிக்கைகளை நிராகரித்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தற்போது உறுதி செய்துள்ளது.

மேலும், மரண தண்டனைக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று பன்னீா்செல்வத்திடம் நீதிமன்றம் தீா்ப்பில் கூறவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெராயின் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு மலேசியத் தமிழரான நாகேந்திரன் கே.தா்மலிங்கத்தைத் தூக்கிலிடுவது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் முடிவெடுக்கவுள்ளது.

இந்தச் சூழலில், பன்னீா்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூா் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.