வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ரஷியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 27,550 பேருக்கு பாதிப்பு

ரஷியாவில் ஒரேநாளில் 27,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2021, 1:08 pm

DIN

ரஷியாவில் ஒரேநாளில் 27,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,550 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும்.

அதிகபட்சமாக மாஸ்கோவில் 5,404 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  76,90,110ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 924 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,13,549ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து 20,330 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 67,99,230ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.