உலகம் முழுவதும் 640 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 640 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 640 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.64 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.
இதையும் படிக்க | 2021 அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு
உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.45 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.09 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.38 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.5 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(அக்-4) நிலவரப்படி 640 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (வியாழக்கிழமை) நிலவரப்படி இந்தியாவில் 50,17,753 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.
அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :
சீனா - 222.9 கோடி
இந்தியா - 91.15 கோடி
ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி
அமெரிக்கா - 48.6 கோடி
பிரேசில் - 24.07 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...