தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

டோக்கியோ நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 52 பேர் காயம்

டோக்கியோ நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :8 அக்டோபர் 2021, 11:11 am

DIN

டோக்கியோ நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றிரவு 10:41 நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு சிபா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது 5.9ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சைதாமா, சிபா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. 
இதனால் அஞ்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதோடு மின்சாரம் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 52 பேர் காயமடைந்துள்ளனர். சிபா 14, டோக்கியோ 12, சைதாமா 11 என மொத்தம் 52 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக ஜப்பானில், 2011ஆம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 15 ஆயிரம் மக்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.