ரஷியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,015 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன் 2,25,325 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
இதுதவிர, புதிதாக 33,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,60,752-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குலுக்கல் பரிசு போன்ற திட்டங்கள் மூலம் ரஷியாவில் கரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனா். எனினும், தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் அங்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
கரோனாவால் ரஷியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்கான பொதுமுடக்கத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு தயங்கி வருகிறது. இதன் காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தினசரி பலி எண்ணிக்கை தொடா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவதாகக் கூறப்படுகிறது.