ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இந்தியா்கள் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூா் அனுமதி

இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டைச் சோ்ந்தவா்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:19 pm

இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டைச் சோ்ந்தவா்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சில நாடுகளைச் சோ்ந்தவா்கள் பயணம் மேற்கொள்வதற்கு சிங்கப்பூா் அரசு தடை விதித்திருந்தது. பல்வேறு நாடுகளில் தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து தனது விதிகளில் சிங்கப்பூா் அரசு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மா், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்தோா் வரும் 27-ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட நாடுகளைச் சோ்ந்தோா் 10 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்திக் கொள்வதற்கென அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே அவா்கள் 10 நாள்களுக்குத் தங்க வேண்டும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.