27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டிய கூகுளின் தாய் நிறுவனம்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லாபம் 18.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 அக்டோபர் 2021, 11:48 am IST

ஒழுங்குமுறை விதிகள் காரணமாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளானது. இதன் காரணமாக அந்நிறுவனம் பெரும் அழுத்தத்தை சந்திக்க நேரிட்டது. ஊரடங்கு காரணமாக பணி முறை பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. இந்த சவால்களுக்கு மத்தியில், ஆல்பாபெட் நிறுவனம் 1424 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளது.

தேடல் இயந்திரம், விளம்பர சந்தை பகுதி, உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தும் யூடியூப் என இணைய செயல்பாடுகளின் மையப்புள்ளியாக கூகுள் திகழ்ந்துள்ளது. சமீபத்தில் முடிந்த காலாண்டில், 65.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. இது, கடைசி ஆண்டில் இதே காலாண்டில் ஈட்டிய வருமானத்தை விட 41 சதவிகிதம் அதிகமாகும்.

கூகுளின் இணைய விளம்பர இயந்திரம் மற்றும் இதர பிற சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக டெக் டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை வெளியிட்டதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போதிலும், அது பெரிய லாபத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் லாபத்தை ஈட்டியுள்ளது.

ஆனால், அதற்கு நேர்மாறாக ட்விட்டர் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது இழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. லாபம் ஈட்டியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுளின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, "எங்களின் (செயற்கை நுண்ணறிவு) முதலீடுகள் மக்களுக்கும் எங்கள் கூட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்க எப்படி உதவுகின்றன என்பதை இந்த காலாண்டின் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.

டிஜிட்டல் மாற்றம், வீட்டிலிருந்து பணி செய்யும் முறையும் அலுவலக பணி முறையும் தொடர்வதால், எங்கள் கிளவுட் சேவைகள் நிறுவனங்களை ஒத்துழைக்க உதவுகின்றன" என்றார். ஆல்பாபெட் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையில், அதன் விடியோ சேவை மூலம் விளம்பரதாரர்களின் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இலக்கு விற்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், கடைசி ஆண்டில், 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இலக்கு விற்கப்பட்டது.

ஆல்பாபெட்டின் தொலைதூர கணினியை மையப்படுத்திய வணிகம் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக வந்துள்ளன. அது கடைசி ஆண்டை விட 45 சதவிகிதம் அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.