தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தாக்கத்தை ஏற்படுத்தும் உலக வெப்பமயமாதல்; திட்டம் வகுத்த ஜி 20 நாடுகள்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அளவை விட உலக வெப்பமயமாதலை குறைக்க ஜி 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 அக்டோபர் 2021, 11:49 am

உலக வெப்பமயமாதலை தொழிற்சாலைகள் வருவதற்கு முந்தைய காலத்தில் இருந்த அளவில் அதாவது 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை கட்டுக்குள் வைப்பது குறித்து பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட வரைவில், 1.5 டிகிரி செல்சியஸ் என்ற உறுதிமொழியை அடையாமல் ஜி 20 நாடுகள் தோல்வி அடையும் என்பது போலவே குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், கிளாஸ்கோ பருவநிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இரவு பகல் பாராமல் அலுவலர்கள் வரைவை திருத்தி எழுதியுள்ளனர். உலகின் 80 சதவிகித கார்பன் உமிழ்வு, ஜி 20 நாடுகளால் வெளியிடப்படுகிறது. இதை களையும் விதமாக எடுக்கும் உறுதிமொழிகள் கிளாஸ்கோ பருவ நிலை மாநாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமையும்.

இதுகுறித்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கூறுகையில், "இன்று நாம் எடுக்கும் முடிவுகள் கிளாஸ்கோ உச்சி மாநாட்டின் வெற்றியின் மீதும் இறுதியில் காலநிலை நெருக்கடியைச் சமாளிக்கும் நமது திறனின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பாரிஸ் உடன்படிக்கையின் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் நீண்ட கால இலக்குகளை நாம் அமைக்க வேண்டும். அவற்றை அடைய குறுகிய கால மாற்றங்களைச் செய்ய வேண்டும்" என்றார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அளவை விட உலக வெப்பமயமாதலை குறைக்க ஜி 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு கீழ் அதாவது கிட்டத்தட்ட 1.5 டிகிரி செல்சியஸுக்கு இணையாக குறைக்க வேண்டும் என பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.