கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி , 2 பேர் மாயம்

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி , 2 பேர் மாயம்
Updated On :3 செப்டம்பர் 2021, 7:50 am

DIN

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேபாளம் நாட்டின் பார்பட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த சிலர் சிக்கிக்கொண்டதை அடுத்து  அவர்களை மீட்கும் பணியில் இருக்கும் மீட்புப்படையினர் இதுவரை 6 சடலங்களை மீட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் , ' திடீரென ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு உண்டாகி சிலர் உள்ளே புதைந்தனர் . தற்போது வரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். இருவர் மாயமாகி இருக்கிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

பருவக்காற்று ஆரம்பமானதைத் தொடர்ந்து இமைய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த கனமழை பொழிவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.