கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி , 2 பேர் மாயம்

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image

நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி , 2 பேர் மாயம்

Updated On :3 செப்டம்பர் 2021, 7:50 am

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேபாளம் நாட்டின் பார்பட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த சிலர் சிக்கிக்கொண்டதை அடுத்து  அவர்களை மீட்கும் பணியில் இருக்கும் மீட்புப்படையினர் இதுவரை 6 சடலங்களை மீட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் , ' திடீரென ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு உண்டாகி சிலர் உள்ளே புதைந்தனர் . தற்போது வரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். இருவர் மாயமாகி இருக்கிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

பருவக்காற்று ஆரம்பமானதைத் தொடர்ந்து இமைய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த கனமழை பொழிவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.