தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: குழந்தை உள்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 11:37 am

DIN

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லேக்லேண்டில் இரண்டு வீடுகளில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

இதில், கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இதில் 11 வயது சிறுமி ஒருவர் பலமுறை சுடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருடன் நடைபெற்ற மோதலில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சரணமடைந்ததாகவும் அவர் இந்தத் தவறை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.