திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தலிபான்களின் புதிய அரசு: விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தானுக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான புதிய அரசை அறிவிக்கும் விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 3:48 pm IST

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான புதிய அரசை அறிவிக்கும் விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிதானின் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா, துருக்கு உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. இந்நிலையில், புதிய அரசு குறித்த அறிவிப்பை தொடர்ந்து தலிபான்கள் தாமதப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தலிபான் தலைவர்களில் ஒருவர் கூறியது:

“ஆப்கானிஸ்தானின் புதிய அரசை அறிவிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. சர்வதேச நாடுகள் மற்றும் ஆப்கன் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியை அமைக்கவுள்ளோம்.

மேலும், புதிய அரசை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சீனா, பாகிஸ்தான், ரஷியா, துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.”

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் தலைநகரை கைப்பற்றினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.