மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கன் உடனான விமான சேவை: பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

News image
ஆப்கன் உடனான விமான சேவை: பாகிஸ்தான் அறிவிப்பு
Updated On :11 செப்டம்பர் 2021, 9:46 am

DIN

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு அந்நாட்டில் உள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். 

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கனில் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து விமான நிலையம் பராமரிக்கப்படாமல் சேதத்திற்குள்ளாகியது.

மேலும் தலிபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவையைத் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ள இந்த விமான சேவைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து விட்டதாக பாகிஸ்தான் பன்னாட்டு விமானநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.