ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; அமெரிக்காவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

ஆப்கனிலிருந்து 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை ஏற்றிவரும் விமானங்களுக்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தரையிறக்கும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2021, 8:01 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களையும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களையும் ஏற்றிவரும் விமானங்களுக்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தரையிறக்கும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டைனமோ என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர் பிரையன் ஸ்டர்ன் கூறுகையில், "அமெரிக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இம்மாதிரியான விமானங்களை தரையிறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "காம் ஏர் என்ற தனியார் ஆப்கன் விமான நிறுவனத்தின் விமானம் மூலம் காபூலிலிருந்து 59 குழந்தைகள் உள்பட 117 பேருடன் அபு தாபிக்கு வந்தடைந்தோம். அபு தாபி விமான நிலையத்தில் 14 மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக சென்றிருந்த அமெரிக்க ராணுவத்தின் மூத்த அலுவலர்கள், முன்னாள் இந்நாள் உயர் மட்ட அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுதான் தரையிறங்கும் அனுமதி கிடைக்காமல் அபு தாபி விமான நிலையத்தில் சிக்கியுள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகள் மோசமாக மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இக்குழு அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தரையிறங்கும் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், விமானங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி வழங்கப்படும். இதற்கு எப்போதும் சிறுதி காலமாகும்" என்றார்.

கடந்த மாதம் மீட்பு பணிகளின்போது, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாத தவித்த அமெரிக்கர்களையும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களையும் திரும்ப அழைத்து கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.