உலகம் முழுக்க கரோனா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளில் பொருளாதார இழப்பு மிகப் பெரிய ஒன்றாக உருவாகியுள்ளது.
பல்வேறு நாடுகளும் தனி நபர் பொருளாதாரச் சிக்கலைத் தவிர்க்க போராடி வரும் நிலையில் , மெக்ஸிகோவில் கரோனாவால் 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படிருக்கிறார்கள்.
2018 ஆம் ஆண்டின் கணக்கின் படி 20 லட்சம் பேர் வறுமையில் இருந்ததாகவும், கரோனாவால் இரண்டே வருடத்தில் 58 லட்சத்தைக் கடந்து விட்டதாகவும் அந்நாட்டின் சமூக மேம்பாட்டு மையம் தெரிவித்திருக்கிறது.
5.20 கோடி மக்கள்தொகை கொண்ட மெக்ஸிகோவில் தற்போது 10.8 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.